தலித்களிடம் சங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார் தலித் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்குத் தொடரப்படும்என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்துக்களைத் திருடர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறினார் என்று கூறி அவர் மீது வழக்குப் போடத் துடிக்கிறது தமிழக அரசு.
ஆனால் தலித் மக்கள் சுத்தமில்லாதவர்கள், அவர்கள் குளித்தால் மட்டுமே கோவில்களுக்குள் அனுமதிக்க முடியும்என்று காஞ்சி சங்கராச்சாரியார் தரக்குறைவாக, இழிவாக பேசியுள்ளார். அதை ஜெயலலிதா ஏன்கண்டிக்கவில்லை?.
தனது தரக்குறைவான பேச்சுக்களுக்கு தலித் மக்களிடம் சங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும். தலித்களைதரக் குறைவாகப் பேசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு மிக விவரமாக பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமில்லாதபதில் அளித்துள்ளார் சங்கராச்சாரியார்.
அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும். அதற்கானஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications