புர்கா அணியாத பெண் தலையை வெட்டி கொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
காஷ்மீரில் புர்கா அணியாத பெண்ணை தீவிரவாதிகள் தலையை வெட்டிக் கொன்றனர்.
நேற்று தான் புர்கா அணியாத மூன்று பெண்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள்மீள்வதற்குள் இன்று ஒரு பெண்ணை தலையை வெட்டி கொடூரமாகக் கொன்றுள்ளது தீவிரவாதக் கும்பல்.
ரஜெளரி மாவட்டத்தில் இந்த இரு சம்பவங்களும் நடந்துள்ளன.
இஸ்லாமிய விதிப்படி பெண்கள் புர்கா அணிந்து தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என பாகிஸ்தான் தீவிரவாதிகள்மிரட்டி வருவது வழக்கம் தான். ஆனால், இப்போது தங்களது உத்தரவை மதிக்காத பெண்களை கொல்ல ஆரம்பித்துள்ளன இந்தமிருகங்கள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் போவதே தவறு என்று சொல்லும் இந்த தீவிரவாதிகள் அப்படியே போனாலும் புர்கா அணிந்துதான் போக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications