அருண் ஜெயின் விடுதலை: மகிழ்ச்சி வெள்ளத்தில் போலாரிஸ் ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலாரிஸ் நிறுவனத் தலைவர் அருண் ஜெயின் இந்தோனேஷிய போலீஸாரால் விடுதலை செய்யப்பட்டதையடுத்து போலாரிஸ்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இருப்பினும் அருண் ஜெயின் விரைவாக இந்தியா திரும்பும் வகையில் அவரது பாஸ்போர்ட்டுகள் விரைவில் ஒப்படைக்கப்படவேண்டும் என்று அந் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான போலாரிஸ் நிறுவனத்தலைவர் அருண் ஜெயின், துணைத் தலைவர் ராஜீவ் அகர்வால் இருவரும் ஜகார்தாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் நேரடித் தலையீட்டின் பேரில் தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் தி.நகர், நாவலூர் ஆகிய இடங்களில் உள்ள போலாரிஸ் நிறுவன ஊழியர்கள், போலாரிஸ்நிறுவனத்துடன் விரைவில் இணையவுள்ள ஆர்.பி. டெக் நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவரது விடுதலை செய்து வெளியானதும் அலுவலகத்தில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

அருண் ஜெயின் மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரின் குடும்பத்தினரை அலுவலகத்திலேயே பெரும்பாலான நேரம் தங்கவைத்து ஊழியர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த கைது விவகாரத்தால் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று போலாரிஸ் நிறுவன துணத் தலைவர் ரகுராம்பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+