Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எச்சில் துப்பியதில் தகராறு: 2 வாலிபர்கள் குத்திக் கொலை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

எச்சில் துப்பியது தொடர்பாக எழுந்த மோதலில் இரு வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. இங்குள்ள ஏ.பி. நகர் காலனியைச் சேர்ந்தவர் அன்புராஜ்.

இவரது வீட்டின் வாசலில் ஞானராஜ் என்ற வாலிபர் எச்சிலைக் காரித் துப்பினார். இதனால் எரிச்சலடைந்த அன்புராஜ், ஏன் வீட்டுவாசலில் எச்சில் துப்பினாய் என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஞானராஜின் தம்பி மனோகரன் தனது அண்ணனுக்கு ஆதரவாக மோதலில்இறங்கினார். இருவரும் சேர்ந்து அன்புராஜை அடிக்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து அண்டை வீட்டினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

ஆனால், திடீரென ஞானராஜூம் அவனது தம்பி மனோகரனும் தங்களிடம் இருந்த கத்திகளை உருவி அன்புராஜைக் குத்தினர்.இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அவர்களிடம் இருந்து அன்புராஜைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது பொதுமக்களையும் இந்த இரு சகோதரர்களும் சரமாறியாகக் கத்திகளால் குத்தினர்.

இதில் அன்புராஜ் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். சண்டையை விலக்கச் சென்ற ராஜேஷ் என்ற வாலிபருடம்கத்துக் குத்து விழுந்து இறந்தார். மேலும் 3 பேருக்கும் தொடை, நெஞ்சுப் பகுதிகளில் கத்திக் குத்துகள் விழுந்தன.

இதையடுத்து ஞானராஜும் அவனது தம்பி மனோகரனும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

காயமடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்த வீட்டின் வாசலில் எச்சிலையும் துப்பிவிட்டு அதைத் தட்டிக் கேட்ட வீட்டின் உரிமையாளரையும் கொன்றுவிட்டு,சண்டையை விலக்கச் சென்றவரையும் கொன்றுவிட்டு ஓடியுள்ளனர் இந்த கேடுகெட்ட சகோதரர்கள்.

இவர்கள் ஏன் கத்திகளைத் தயாராகவே வைத்துக் கொண்டு திரிந்தனர் என்று தெரியவில்லை.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+