For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து 2 விபத்துக்கள்: தம்பதி உள்பட 6 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி & ராமநாதபுரம்:

திருநெல்வேலி அருகே மாருதி காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு தம்பதியர் உடல் நசுங்கி இறந்தனர். அதேபோல் ராமநாதபுரம் அருகே மற்றொரு மாருதிகாரும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் பரிதாபமாக இருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தவர் ஜெயடேனியல்.

இவருடைய மனைவி கற்பகம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்து வந்தார்.

இவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி திருநெல்வேலியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு மாருதிகாரில் வந்து கொண்டிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீதுஅவர்கள் வந்த கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இவ்விபத்தில் ஜெயடேனியலும் கற்பகமும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில்...

இதற்கிடையே ராமநாதபுரம் அருகே ஏற்பட்ட மற்றொரு விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினியரிங் கல்லூரி அருகே இன்று மாலை ஒரு மாருதி கார் வந்துகொண்டிருந்தது.

அப்போது அந்தக் காருடன் எதிரே வந்த அரசு பஸ் ஒன்று பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X