ஈரானில் விமானம் நொறுங்கி விழுந்து 50 பேர் பலி
டெஹ்ரான்:
ஈரானில் உக்ரைன் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவைச்சேர்ந்த ஏரோநாட்டிக் என்ஜினியர்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட 50 பேர் பலியாகினர்.
"அனட்டோவ்" ரகத்தைச் சேர்ந்த ஏ.என்.-140 என்ற இந்த விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன் விபத்தில்சிக்கியதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை, ஆறு விமான ஊழியர்கள் உள்ளிட்ட 50 பேருமே உயிரிழந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோநாட்டிக் என்ஜினியர்கள்ஆவர்.
உக்ரைனில் உள்ள கார்க்கிவ் நகரிலிருந்து இந்த விமானம் கிளம்பி, ஈரான் விரைவில் தயாரிக்கவுள்ள ஈரான்-140ரக "அனடோவ்" விமான உற்பத்தி நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்தபோதுதான் விபத்து ஏற்பட்டது.
மீட்பு நடவடிக்கைகள் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் விபத்துக்கான காரணம் குறித்துஇன்னும் தெரியவில்லை. விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைத்த பின்னரே அதன் விவரம் தெரிய வரும்.
-->












Click it and Unblock the Notifications