உசிலம்பட்டி அருகே தம்பதியை வெட்டிக் கொன்று நகைகள் கொள்ளை
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த கணவன்-மனைவியை அரிவாளால் கொடூரமாகவெட்டிக் கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நல்லதாயம்பட்டி. இங்குள்ள ஒரு வீட்டிற்குள் நேற்றிரவு ஒருகொள்ளைக் கும்பல் புகுந்தது.
அந்த வீட்டிலிருந்தவர் அவர்களைத் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கொள்ளையர்கள்தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரைச் சராமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சாய்ந்த அவர் அந்த இடத்திலேயே பிணமானார். சத்தம் கேட்டு வந்தஅவருடைய மனைவியையும் கொள்ளையர்கள் வெட்டிக் கொன்றனர்.
பின்னர் அவர் கழுத்தில் போட்டிருந்த நகைகளையும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளையும் அவர்கள்அள்ளிக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
தகவலறிந்து மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையர்களையும்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தக் கொலை-கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications