இந்தியப் பெருங்கடலில் புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியப் பெருங்கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதால், தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னைக்கு அருகே வங்கக் கடலில் தோன்றிய புயல் சின்னத்தைத் தொடர்ந்துஅந்நகரில் பலத்த மழை கொட்டியது.
இம்மழையால் சென்னையின் பெரும்பாலான சாலைகள் பெயர்ந்து போயின. வாகனங்களை ஓட்ட முடியாமல்மக்கள் இன்னும் கூட அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு அருகே, இலங்கைக்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் தோன்றியுள்ளது.
இது படிப்படியாக நகர்ந்து வடகிழக்குத் திசையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
-->












Click it and Unblock the Notifications