வாஜ்பாய்க்கு வயது 79!
டெல்லி:
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று தன்னுடைய 79வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் வாஜ்பாய்க்குபோன் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலைவாஜ்பாயின் வீட்டிற்குச் சென்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறினர்.
தன் வீட்டுக்கு வந்த மக்களை அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார் வாஜ்பாய். தொடர்ந்து நான்கு மணிநேரத்திற்கு மக்கள் கூட்டம் அவருடைய வீட்டில் குவிந்தது.
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரும்வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பிறந்தநாளையொட்டி கிராமப்புற குடிநீர்த் திட்டமான "ஸ்வஜல்தாரா"வைத் தொடங்கி வைத்தார் வாஜ்பாய்.
வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி "போரும் அமைதியும்" என்ற தலைமையிலான சிறப்பு கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இந்தியா கேட்டில் நடைபெறும் இந்தக் கலைநிகழ்ச்சியைஷெகாவத், அத்வானி உள்ளிட்டவர்கள் பார்வையிடுகின்றனர்.
வாஜ்பாய் குறித்த புகைப்படக் கண்காட்சி ஒன்றும் நடைபெறவுள்ளது. மேலும் ரத்ததான முகாம் ஒன்றை பா.ஜ.க.தலைவர் வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.
-->