நாமக்கல் அருகே அடுத்தடுத்து விபத்துக்கள்: 8 பேர் பலி
நாமக்கல்:
நாமக்கல் அருகே ஏற்பட்ட 2 வெவ்வேறு சாலை விபத்துக்களில் பெங்களூரைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேங்கல்பாளையம் பிரிவு சாலையில் ஒரு டாடா சுமோ காரும் எதிரே வந்தலாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. காரின் டயர் வெடித்ததால்தான் நிலை தடுமாறிய அதுலாரியுடன் மோதிக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவருமே பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் பெயர் விவரம்தெரியவில்லை.
இதற்கிடையே நாமக்கல்-திருச்சி சாலையில் மற்றொரு விபத்து ஏற்பட்டது. நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீதுவேகமாக வந்து கொண்டிருந்த ஒரு கார் நிலை தடுமாறி மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கனகாம்பாள் (78) என்ற பெண்ணும், பிரசாத் (60) என்பவரும் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ரங்கநாத் (50) என்பவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.
இவ்விபத்தில் உயிரிழந்த மூன்று பேரும் கூட பெங்களூரைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிய வந்துள்ளது.கோவில்களில் சாமி கும்பிட்டு விட்டு திருச்சியிலிருந்து பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதுதான்இவர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்த இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications