கல்பாக்கம் அணுமின் நிலையத்தை தகர்க்க சதியா?
கல்பாக்கம்:
வரும் புத்தாண்டு தினத்தன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம்தீட்டப்பட்டுள்ளதாக ஒரு மர்மக் கடிதம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதிலிருந்தே நாட்டிலுள்ள அனைத்துஅணுமின் நிலையங்களுக்கும், கோவில்களுக்கும், விமான, ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டிருந்தது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு ஒரு மர்மக் கடிதம் வந்துள்ளது. வரும் புத்தாண்டு தினத்தன்றுஇந்த அணுமின் நிலையத்தை சிலர் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனைநடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இருந்தாலும் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய போலீசார் 24 மணிநேரமும் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
-->