தானும் எரிந்து கணவரையும் எரித்த மனைவி
சென்னன:
குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் ஒருவர் தன் உடலில் கெரசின் ஊற்றி, தீக்குளித்து பரிதாபமாகஇறந்தார். அப்போது அவர் தன் கணவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டதால் அவரும் தீக்காயமடைந்து உயிருக்குப்போராடி வருகிறார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 2 மகன்கள்உள்ளனர்.
தச்சுத் தொழிலாளியான தனுஷ்கோடிக்கும், மாலதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நிறைய சம்பாதித்துவரவில்லை என்று கூறி கணவருடன் சண்டை போடுவாராம் மாலதி.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த மாலதி தன் உடல் மீது கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனுஷ்கோடி, அவரைக் காப்பாற்ற முயன்றார்.
ஆனால் "நானே சாகும்போது நீ மட்டும் எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்?" என்று கூறிக் கொண்டேதனுஷ்கோடியைக் கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டார் மாலதி.
இதில் இருவரும் கருகினர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மகன்களுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.இதையடுத்து பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மாலதி பரிதாபமாக இறந்தார். தனுஷ்கோடி ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.ஆகாஷ் என்ற மகனின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது அவர்கள் இருந்த குடிசையும் முழுவதும் எரிந்து சாம்பலானது. சம்பவம் குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->