மேலும் ஒரு தமிழ்த் தீவிரவாதி தஞ்சாவூரில் கைது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

சமீபத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மக்கள் விடுதலைப் படையின் தலைவர் ராஜாராமின் கூட்டாளியான சுதாகர் என்பவன்பிடிபட்டுள்ளான். இவனிடம் இருந்து வெடி மருந்துகள், டெட்டோனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டவர் ராஜாராம். வங்கிக் கொள்ளைகள், கொலைகளில் தொடர்புடைய இவர்சமீபத்தில் சென்னையில் பிடிபட்டார். இவர் கொடுத்த தகவலின்பேரில் தமிழ் ஒடுக்கப்பட்டோர் விடுதலைப் படையைச் சேர்ந்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர் தான் சென்னை ஸ்டேட் வங்கியின் கேசியரைக் கொன்றுவிட்டு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுட்டவர்கள் என்றுதெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந் நிலையில் ராஜாராமின் கூட்டாளியான சுதாகர் என்பவன் இன்று தஞ்சாவூரில் போலீசாரிடம் சிக்கினார். இவரிடம் ஏராளமானவெடி மருந்தும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் டெட்டோனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே ராஜாராமின் சிறைக் காவலை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இவரை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இவர் பல உண்மைகளைக் கக்கி வருகிறார். இதனால் மேலும் பலர் பிடிபடுவார்கள் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+