4ம் தேதி டெல்லியில் காவிரி ஆணையக் கூட்டம்: தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் ஜனவரி 4ம் தேதி டெல்லியில் காவிரிக் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார். இதில்முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார்.

மேட்டூரில் நீர் மட்டம் வெகு வேகமாகக் குறைந்து விட்டதால் இன்று அணை மூடப்படுகிறது. இதனால் கர்நாடகத்திடம் இருந்துஉடனே நீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. மழை நின்றுவிட்டதால் சம்பா பயிர்களைக் காப்பாற்ற நீர்தேவைப்படுகிறது. ஆனால், கர்நாடகம் நீர் விட மறுத்து வருகிறது.

இப்போது மேட்டூர் அணையில் இருக்கும் நீர் சேலம் மாவட்ட குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய போதுமானதாகஉள்ளது. அணையில் உள்ளே இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தியும், மதா கோவிலும் வெளியே தெரியும் அளவுக்குஅணை வறண்டுவிட்டது.

இதனால் அணையை நேற்ற மூடிவிட உத்தரவிடப்பட்டது. ஆனால், விவசாயிகள் கோரிக்கை வைத்ததால் இன்றும் நீர்விடப்பட்டது. ஆனால், இன்று இரவோ அல்லது நாளையோ மேட்டூர் அணை மூடப்பட்டுவிடும்.

இதனால் உடனே காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு ஜெயலலிதா இரு கடிதங்கள் எழுதினார்.

இதைத் தொடர்ந்து வரும் 4 அல்லது 5ம் தேதி காவிரி ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் எந்த நாளில்கூட்டம் நடத்தலாம் என்று முதல்வர்கள் தங்களது கருத்தை உடனே தெரிவிக்குமாறும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆந்திரம்தவிர்த்த தென் மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் பங்கேற்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதுசசிகலாவுடன் ஹைதராபாத்தில் ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா இதற்காக 2ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு காவிரி ஆணையக் கூட்டத்துக்கு ஜெயலலலிதா செல்வார் எனமுதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+