உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போதைய நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வி.வி.எஸ். லக்ஷ்மண் உலகக்கோப்பைப் போட்டிக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.
அவருக்குப் பதிலாக தற்போது அணியில் இல்லாத தினேஷ் மோங்கியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில்ஆடவுள்ளார்.
தற்போது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணியின் கேப்டன் கங்குலியுடனும், பயிற்சியாளர் ஜான்ரைட்டுடனும் "டெலி-கான்பரன்ஸ்" மூலம் பேசி முடிவெடுத்த பின்னர் 15 பேர் குழுவை இந்திய கிரிக்கெட் போர்டுஅறிவித்தது.
அணி விவரம்:
செளரவ் கங்குலி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், தினேஷ் மோங்கியா, ஜவகல்ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ஜாஹீர் கான், ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர், யுவராஜ் சிங், ஆசிஸ் நேஹ்ரா, பார்த்திவ்பட்டேல், முகம்மது கைப், சஞ்சய் பங்கர்.
ஐ.சி.சி. தரும் சிக்கல்:
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் இந்த 15பேருமே உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியும் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டியின்போது தாங்கள் அறிவிக்கும் விளம்பரதாரர்களின் பெயர், லோகோ போன்றவற்றைமட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வற்புறுத்தியுள்ளது. அவற்றை மட்டுமேதங்களுடைய உடைகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தயார் செய்துள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் வீரர்கள்மட்டுமே உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியும் என்றும் அது கூறியுள்ளது.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட இந்திய அணி வீரர்கள் மறுத்து விட்டனர். அவர்களுக்கு இந்தியகிரிக்கெட் போர்டும், இந்திய விளையாட்டுத் துறையும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 15 இந்திய வீரர்களின் பெயர்ப் பட்டியல் ஐ.சி.சிக்கு அனுப்பப்பட்டு விட்டது.
ஆனால் இவர்கள் அனைவருமே ஐ.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதால் இந்தப் பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. நிராகரித்து விடும் என்றே தெரிகிறது.
அவ்வாறு அந்தப் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டு விட்டால் வேறொரு அணியை இந்திய கிரிக்கெட் போர்டுஅறிவிக்க வேண்டும். அதிலும் நாளைக்குள்ளாகவே புதிய அணி அறிவிக்கப்பட வேண்டும்.
டால்மியா ராஜினாமா:
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒப்பந்த கமிட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் போர்டுதலைவரான ஜக்மோகன் டால்மியா இன்று ராஜினாமா செய்துவிட்டார்.
ஐ.சி.சியின் ஒப்பந்தம் இந்திய வீரர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் அந்தக் கமிட்டியில் தான் தொடர்ந்துநீடிப்பது சரியல்ல என்பதால், ஒப்பந்தக் கமிட்டியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக டால்மியாநிருபர்களிடம் கூறினார்.
-->
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications