மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தர படகு சவாரிக்கு ஏற்பாடு!
மதுரை:
மதுரை வண்டியூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் படகு சவாரி விடுவதற்குவசதியாக, நிரந்தரமாக தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை மீனாட்சி அம்மன்கோவில் செயல் அதிகாரி பாஸ்கரன் தெரிவித்தார்.
வண்டியூர் தெப்பக்குளத்தில் நேற்று படகு சவாரி ஆரமபிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சேது. ராமச்சந்திரன்சவாரியைத் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பாஸ்கரன் பேசுகையில்,
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வண்டியூர் தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் படகு சவாரி விட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மிகப் பெரிய தெப்பக் குளங்களில் ஒன்றாக் திகழும் வண்டியூர் தெப்பக்குளத்தில் 12 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்க முடியும்.
மணலூர் பகுதியில் உள்ள வைகை ஆற்றிலிருந்து தண்ணீரை பம்ப் செய்து தெப்பக்குளத்திற்கு கொண்டு வரும்திட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது.
அனுமதி கிடைத்தவுடன் அதற்கான மின்சாரச் செலவை கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். இதன் பிறகுதெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட முடியும்.
தெப்பக்குளத்தில் படகு சவாரி நிரந்தரமானவுடன் அதைச் சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். வரும் ஜனவரி 19ம்தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது என்றார் பாஸ்கரன்.
-->