இலங்கை எம்.பிக்களுக்கு 225 இந்திய கார்கள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தனது எம்.பிக்களுக்காக இந்தியாவில் இருந்து 225 கார்களை வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
டாடா மற்றும் மாருதி நிறுவனங்களிடம் இந்தக் கார்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 55.60 கோடியை செலவிட இலங்கைஅமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்க உள்ளது. இந்தப் பணத்தில் ஒரு பகுதியைத் தான் கார்கள் வாங்கஇலங்கை அரசு செலவிட உள்ளது.
முன்பெல்லாம் இலங்கை எம்.பிக்களுக்கு ஜப்பானிய கார்களான மிட்சுபிசி பஜீரோ மற்றும் டயோட்டா லேண்ட்கிரூயிசர் ஆகியகார்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது தான் முதன்முறையாக இந்தியக் கார்கள் வழங்கப்பட உள்ளன.
விலை குறைவாக இருப்பதால் தான் இந்தியக் கார்களைத் தேர்வு செய்ததாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications