தமிழக ஹஜ் பயணிகளின் முதல் குழு புறப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகளின் யாத்திரை இன்று முதல் தொடங்கியது.
தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு 2,800 பேர் ஹஜ் புனித யாத்திரை செல்கிறார்கள்.
இவர்களுக்காக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து ஜெட்டா நகர் வரை இந்தவிமானங்கள் இயக்கப்படும்.
முதல் விமானம் சனிக்கிழமை (இன்று) காலை 9 மணிக்குப் புறப்பட்டது. முதல் குழுவில் 411 பேர் பயணிக்கள்இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒரு குழந்தையும், 221 பெண்களும் அடக்கம்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா இவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்.
10ம் தேதி வரை ஜெட்டா நகருக்கு இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.
-->












Click it and Unblock the Notifications