புலிகள் ரேடியோ: சந்திரிகாவுக்கு ரணில் கடும் கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் ரேடியோ அலைவரிசையை மேம்படுத்த நார்வே நாடு கருவிகள் கொடுத்ததை விமர்சித்த இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நார்வே அரசுக்கு இது தொடர்பாக சந்திரிகா எழுதிய கடிதத்தில், புலிகளுக்கு ஆதரவாக நார்வே நடந்து கொண்டால் அதைஎதிர்த்து தூதரகரீதியில் நடவடிக்கை எடுப்பேன். புலிகளுக்கு ரேடியோ கருவிகள் வாங்கித் தந்ததில் இலங்கையின் சுங்கவிதிகளை கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் மீறியுள்ளது. இதனால் நார்வே தூதர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றுகேட்டிருந்தார் சந்திரிகா.
சந்திரிகாவின் இச் செயலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சந்திரிகாவுக்குஅவர் எழுதியுள்ள கடிதத்தில், போர் பாதையைவிட்டு புலிகள் மாறிவிட்டனர். அமைதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களைஊக்குவிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகள் குறித்து தங்கள் மக்களுக்கு விவரத்தை எடுத்துச் சொல்ல புலிகளுக்கு உரிமை உண்டு. இதற்காகத் தான்அவர்களது ரேடியோ ஒலிபரப்பை மேம்படுத்த உதவினோம். இதில் என்ன தவறு?
தேவையில்லாமல் இதை பிரச்சனையாக்குவதன் மூலம் அமைதி முயற்சிகளைக் கெடுக்க நீங்கள் முயல்வதாகவே கருத முடிகிறதுஎன்று ரணில் கூறியுள்ளார்.