ஈரோடு, கோவை, தர்மபுரி ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தர்மபுரி:
தர்மபுரி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்த கடிதத்தையடுத்த தீவிர சோதனைநடத்தப்பட்டு வருகிறது.
தர்மபுரி ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் திருப்பூரில் இருந்து அனுப்பப்பட்டது. தமிழர்விடுதலைப் படை,அரியலூர் என்ற பெயரில் வந்துள்ள அக் கடிதத்தில்,
தர்மபுரி ரயில் நிலையம் இன்னும் 60 நாட்களுக்குள் தகர்க்கப்படும் என்றும் வேறு சில முக்கிய ரயில் நிலையங்களிலும்இதுபோலவே வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றும்
கூறப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து தர்மபுரி ரயில் நிலையம் ழுவதிலும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்குகுண்டு எதுவும் இல்லை.
இதே போல ஈரோடு மற்றும் கோவை ரயில் நிலையங்களிலும் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் எங்கும் குண்டுசிக்கவில்லை.