தமிழகத்தில் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து
சென்னை:
தமிழகத்தில் 40,000 மையங்கள் மூலம் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்றுவழங்கப்பட்டு வருகிறது.
இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் தடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் 5 வயதுக்குக் கீழே உள்ளகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இன்றும் அடுத்த மாதம் 9ம் தேதியும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்துஅளிக்கப்படும்.
அதன்படி முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்கும் பணி இன்று காலை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் சுமார் 40,000 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார மையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் டாக்டர்கள், நர்ஸ்கள், கம்பவுண்டர்கள் உள்ளிட்ட இரண்டு லட்சம்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை, அம்மாநகராட்சியின் மேயர் கராத்தே தியாகராஜன்ஆகியோர் வெவ்வேறு இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் பணிகளைத் துவக்கி வைத்தனர்.
போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படாமல் ஒரு குழந்தையைக் கூட விட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள்குறிக்கோள் என்று நிருபர்களிடம் செம்மலை கூறினார்.
-->












Click it and Unblock the Notifications