5 பேரை வெட்டிக் கொன்ற 3 சகோதரர்களுக்கு தூக்குத் தண்டனை
தூத்துக்குடி:
எட்டயபுரம் அருகே 5 பேரை கொடூரமாக வெட்டிக் கொன்ற 3 சகோதரர்களுக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது தலைக்காட்டூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன்என்பவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் கடந்த 1990ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின் சில நாட்களிலேயே கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துமகேஸ்வரி தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் சரவணன் வீட்டாருடன் சமரசம் பேசுவதற்காக கடந்த 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம்தேதி மகேஸ்வரியை அழைத்துக் கொண்டு அவரது தந்தை முத்துச்சாமி, தாயார் குருவத்தம்மாள், சகோதரர்சுந்தரமூர்த்தி, சித்தப்பா குருசாமி ஆகியோர் வேனில் தலைக்காட்டூர் சென்றனர்.
சரவணன் வீட்டுக்குச் சென்ற அவர்கள் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தகராறு வெடித்ததைத்தொடர்ந்து, ஐந்து பேரும் மீண்டும் விருதுநகருக்கே கிளம்பினர்.
அப்போது அவர்களது வேனை வழிமறித்த சரவணன், அவரது அண்ணன் சங்கரநாராயன்,தம்பி சந்தனப்பாண்டியன் ஆகியோர் வேனில் இருந்த ஐந்து பேரையும் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் 5 பேரும் சம்பவஇடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
கொலையாளிகள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ரத்தினராஜ்தீர்ப்பு அளித்தார்.
-->