மாஜி திமுக அமைச்சருக்கு ரூ. 1 கோடி சொத்து
திருச்சி:
முன்னாள் திமுக அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மற்றும் அவருடைய உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புபோலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். திருச்சியிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள அவரது வீடுகளில்நடந்த சோதனைகளில் அவருக்கு வருமானத்தையும் மீறி சுமார் ரூ. 1 கோடிக்கு சொத்து இருப்பது தெரியவந்தது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கால்நடைத் துறை அமைச்சராக இருந்தவர் செங்குட்டுவன். திருச்சி மாவட்டம்துவரங்குறிச்சியை அடுத்த வேலங்குறிச்சியில் இவருடைய வீடு உள்ளது.
இந்த வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத் துறைடி.எஸ்.பி. போஸ் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது.
திருச்சி கல் மண்டபம் வீட்டிலும் அதே நேரத்திலேயே லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையிட்டனர்.
செங்குட்டுவன் வீடு தவிர அவருடைய மகள், தம்பி மற்றும் உறவினர் ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புபோலீசார் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை வரை தொடர்ந்தன. சுமார் 20 போலீசார் இந்தச்சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதில் மாஜி அமைச்சருக்குச் சொந்தமான சொத்துக்கள் பலவற்றின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அமைச்சராவதற்கு முன் அவருக்கு துவரங்குறிச்சி அருகே வெளக்குறிச்சியில் வெறும் 4.9 ஏக்கர் நிலம் தான்இருந்தது.
ஆனால், இப்போது இவரிடம் இருப்பது கோடிக்கணக்கான சொத்துக்கள். இதில் இன்று சோதனையில் சிக்கியவைரூ. 1 கோடிக்கான ஆவணங்கள்.
இதையடுத்து இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 109வது பிரிவின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டம் 13வதுபிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கூட்டுவன் தவிர அவரது இரு மகன்கள், மகள், மருமகன்,தம்பி மகன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
30 ஏக்கர் நிலம், கார்கள், ரூ. 52 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தியது, மோட்டார் சைக்கிள்கள், ஏர் கண்டிசனர்கள்,புல்டோசர்கள் வாங்கியது என சுமார் ரூ. 1 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்துள்ளார் செங்கூட்டுவன்.