இலங்கை அகதிகள் முகாமில் மத்திய அமைச்சர் ஆய்வு
மதுரை:
மதுரை அருகே திருவாதவூரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு மையத்தை மத்திய உள்துறை இணையமைச்சர்வித்யா சாகர் ராவ் இன்று பார்வையிட்டார்.
இரு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணத்தில் உள்ள அவர் இன்று திருவாதவூர் சென்றார். அகதிகள் இடையேபேசிய அவர் விரைவில் அவர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்ற சூழல் இலங்கையில் உருவாகி வருகிறது.
உங்களை திரும்பவும் அழைத்துக் கொள்ள இலங்கை முன் வந்துள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் இலங்கை பேசி வருகிறது.
ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தி திரும்பிச் செல்லுமாறு நாங்கள் நிர்பந்திக்க மாட்டோம் என்றார்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ராவ்,
இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவது என்று முடிவாகியுள்ளது. முதல் கட்டமாக தமிழகம்உள்பட 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வசிக்கும் 29 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்படும்.
இந்த டிஜிட்டல் அட்டைகளைத் தயாரித்து வழங்க டாடாவின் டி.சி.எஸ். நிறுவனம் முன் வந்துள்ளது. இதன்மூலம் தான் சட்ட விரோதமாகக்குடியேறுபவர்களைக் கண்டறிய முடியும்.
இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தானியப் பெண்கள் இந்தியாவில் தொடர்ந்து வசிக்க விரும்பினால் முதலில் தங்களதுபாகிஸ்தானிய குடியுரிமையைத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications