பெரம்பலூர் அதிமுக பேரூராட்சி தலைவர் வெட்டிக் கொலை: மக்கள் தாக்கியதில் கொலையாளி பலி

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் பேரூராட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் இன்று அடையாளம் தெரியாத ஒருகும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒரு கொலையாளியை மரக்கட்டையால்அடித்துக் கொன்றனர். மற்ற கொலையாளிகள் தப்பித்து விட்டனர்.

பெரம்பலூரில் உள்ள ஆலம்பாடி பகுதியில் இன்று காலை செல்வராஜ் தன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.

பின்னர் திடீரென்று செல்வராஜின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய அந்தக் கும்பல், சிறிது கூடத்தாமதிக்காமல் தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் அவரைத்தாக்கியது.

இதனால் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே செல்வராஜ் பிணமாகச் சரிந்தார். அவர் போட்ட அலறலைக்கேட்ட அக்கம் பக்கத்து மக்கள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு கொலையாளிகளைத் துரத்த ஆரம்பித்தனர்.

கொலையாளிகளில் சக்திவேல் என்பவன் மட்டும் மக்களிடம் வகையாகச் சிக்கிக் கொண்டான். அவனைத் தாங்கள்வைத்திருந்த மரக்கட்டைகளாலேயே மக்கள் சராமாரியாகத் தாக்கினர். இதில் சக்திவேலும் ரத்த வெள்ளத்தில் அந்தஇடத்திலேயே உயிரிழந்தான்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் இன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக்குவிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாகவே செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கடந்த சிலஆண்டுகளுக்கு முன் "நக்கீரன்" பத்திரிக்கை நிருபர் செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்குப்பழிவாங்கும் விதமாகவே இன்று கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாகவிசாரித்து வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+