பவானியில் அணை: கேரள முதல்வருக்கு கருணாநிதி தந்தி
சென்னை:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரி கேரளமுதல்வர் அந்தோணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
பவானி மற்றும் கபினி ஆறுகளின் குறுக்கே கேரள அரசு அணைகள் கட்ட முயற்சிக்கக் கூடாது என்பதைவலியுறுத்தும் தீர்மானம் நேற்றைய திமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
பவானி, கபினி ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டக் கூடாது என்று கேரள அரசை வலியுறுத்தியுள்ளோம்.
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கட்சி பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான தந்திகளைகேரள முதல்வருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் திமுக தொண்டர்களும் அணை கட்டும் முயற்சிகளை எதிர்த்து கேரள முதல்வருக்குத் தந்திகளைஅனுப்ப வேண்டும் என்றார் கருணாநிதி.
முதற்கட்டமாக கருணாநிதியே நேற்று கேரள முதல்வருக்கு இந்த விவகாரம் தொடர்பான ஒரு தந்தியைஅனுப்பியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications