For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்டோ- கால் டாக்சி டிரைவர்கள் மோதல்: காவல் நிலையம் முற்றுகை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் ஆட்டோ டிரைவர்களுக்கும், கால் டாக்சி டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்ஆட்டோ டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதைக் கண்டித்து போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கோவை ரயில் சந்திப்பு பகுதியில் உள்ள ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருபவர் கண்ணன். சவாரிஏற்றுவது தொடர்பாக இவருக்கும், சில கால் டாக்சி டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள், கால்டாக்சி டிரைவர்களும் அடிதடியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீஸார் ஆட்டோ டிரைவர் கண்ணனை விசாரணைக்குக்கூட்டிச் சென்றனர். அப்போது அவரை போலீஸார் அடித்ததாக தகவல் பரவியது. போலீசார் தாக்கியதில் கண்ணனின்கை உடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ரயில் சந்திப்பு ஆட்டோ நிலைய ஆட்டோ டிரைவர்கள் காவல் நிலையத்திற்கு சென்றனர்.கண்ணனை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்கள் காவல் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

ஆட்டோக்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டம்நடந்து வருகிறது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X