சென்னை ரயில் நிலையத்தில் 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சென்னை:
ஒப்பந்த அடிப்படையில் கூலி வேலை செய்வதற்காக ஹைதராபாத்துக்கு செல்ல சென்னை-சென்டிரல் ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த 5 சிறுவர்களை ரயில்வே போலீஸார் மீட்டனர்.
விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த சிறுவர்கள். இவர்களைஹைதராபாத்துக்குக் கூட்டிச் செல்ல 5 பேர் துணைக்கு வந்திருந்தனர்.
ரயில் நிலையத்தில் அவர்களது நடமாட்டத்தைப் பார்த்து சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை அழைத்துவிசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அவர்கள் சிறுவர்களை அழைத்துக் கொண்டு ஹைதராபாத்திற்குச் சென்று ஒப்பந்த அடிப்படையில்அவர்களைக் கூலி வேலை செய்ய வைக்கத் திட்டமிட்டிருந்த விஷயம் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவர்களை அழைத்து வந்த ராமராஜன், சங்கரபாண்டியன் (இருவரும் அருப்புக்கோட்டையைச்சேர்ந்தவர்கள்), லெனின், ஹென்றி (இருவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்), திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர்ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
சிறுவர்களுக்கு 15 வயதுக்குள்தான் இருக்கும். இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஐந்து பேரும் சிறுவர்சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications