கோபி நீதிமன்றத்தில் ஆஜராக கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் உத்தரவு
சென்னை:
வரும் பிப்ரவரி 3ம் தேதி கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் "நக்கீரன்" கோபால் என்று சி.பி.சி.ஐ.டி.போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அவருடைய சென்னை அலுவலகத்தில் இந்த உத்தரவுகொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து "நக்கீரன்" உதவி ஆசியர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோபாலைத் தேடி ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் குழு அலுவலகத்திற்கு வந்தது. அவர்அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் என்னிடம் சம்மனைக் கொடுத்து விட்டுச் சென்றனர்.
தமிழக அரசு தேவையில்லாமல் கோபாலை தொந்தரவுப்படுத்தி வருகிறது. அவர் மீது பொய்யான வழக்குகளைதொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.
கோபால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு பிப்ரவரி 3ம்தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பு கோபாலை வேறு ஒரு வழக்கில் கைது செய்து விட போலீஸார்துடிக்கிறார்கள்.
கோபால் செல்லும் இடமெல்லாம் போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். எங்களது நிருபர்சிவசுப்ரமணியத்தைக் கைது செய்தது போல கோபாலையும் கைது செய்து விட போலீஸார் திட்டமிட்டுவருகிறார்கள்என்றார் காமராஜ்.-
-->