சட்டசபையில் செல்போன், பேஜருக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் செல்போன்,பேஜர் போன்றவற்றை உபயோகிக்க சபாநாயகர் காளிமுத்து தடை விதித்துள்ளார்.
இதனால் பத்திரிக்கையாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சட்டசபையில் அவர் கூறுகையில், நாடாளுமன்ற விதிமுறைகளைப் பின் பற்றியே இந்தத் தடை அமலாக்கப்படுகிறது. அதன்படி சட்டமன்றமண்டபத்துக்கு உள்ளேயும், சபையின் வளாகத்திலும் எம்.எல்.ஏக்கள், செய்தியாளர்கள் யாரும் செல்போன்கள், பேஜர் கருவிகளைப்பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது.
கடந்த 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார். பாதுகாப்பு அம்சத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் உடனுக்குடன் சட்டமன்றச் செய்திகளை தங்களது அலுவலகங்களுக்கு அனுப்புவதில் நிருபர்களுக்கு பிரச்சனை எழுந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications