காளிமுத்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர் கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை
சென்னை:
திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகர் காளிமுத்துவுக்குஎதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக எதிர்க் கட்சிகள் இன்று முக்கியஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
சட்டசபையில் கடந்த 30ம் தேதி டாக்டர் குமாரதாஸைத் தாக்க முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும்கூறி பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.
பரிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் காளிமுத்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதுகுறித்து அனைத்து எதிர்க் கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
இந்நிலையில் 31ம் தேதி நள்ளிரவு பரிதி அவருடைய வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து திமுக தலைமையிலான எதிர்க் கட்சிகள் இன்று கூடி, காளிமுத்துவுக்கு எதிரான நம்பிக்கையில்லாதீர்மானம் கொண்டுவருவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளன.
சென்னை-"ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ்" ஹோட்டலில் இன்று மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
-->