அன்னிய செலாவணி மோசடி: காரில் கடத்தப்பட்ட ரூ. 75 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சென்னையில் இருந்து சேலத்துக்குக் காரில் கடத்தப்பட்ட ரூ. 75 லட்சம் பணம் பிடிபட்டது.

கேரளத்தைச் சேர்ந்த சில ஹவாலா மோசடி கும்பல்களுக்கு சென்னையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சென்று வருவதைசமீபத்தில் தமிழக உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி கும்பல்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந் நிலையில் சென்னையில்இருந்து சேலம், கோவை வழியாக கேரளாவுக்கு சுமார் 1 கோடி ரூபாய் கார் மூலம் கொண்டு செல்லப்பட உள்ள தகவல்போலீசாருக்குக் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அந்தக் காரை வழியிலேயே மடக்கி பணத்தைக் கைப்பற்றுமாறு போலீசாருக்கு டி.ஜி.பி. ராஜகோபாலன்உத்தரவிட்டார். இதற்காக ஒரு தனிப் படையும் அமைக்கப்பட்டது. இந்தப் படையினர் நேற்று மாலை முதல் சேலம் அருகே உள்ளஅயோத்தியாபட்டிணம் சோதனைச் சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் போலீசார் எதிர்பார்த்த அந்த டாடா குவாலிஸ் கார் அந்த சோதனைச் சாவடி அருகே வந்தது. அதை நிறுத்துமாறுபோலீசார் சைகை காட்டினர். ஆனால், அந்தக் கார் வேகமெடுத்துப் பறந்தது.

இதை எதிர்பார்த்த போலீசார் உடனே தயாராக வைத்திருந்த ஜீப்களில் அந்தக் காரை விரட்டினர். அதே நேரத்தில் அடுத்தடுத்துஇருந்த சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன. இதனால் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் குறிக்காக வாகனங்கள்நிறுத்தப்பட்டு மூடப்பட்டன.

போலீசாரால் விரட்டப்பட்ட அந்தக் கார் அன்னதானப்பட்டி என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் அந்தக் கார்மடக்கப்பட்டது. உடனே அதில் இருந்து இறங்கிய 3 பேர் இருட்டில் தப்பி ஓட முயன்றனர். ஆனால், துப்பாக்கி முனையில்அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

இதையடுத்து கார் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது டாஸ் போர்டில் ஒரு ரகசிய அறை உருவாக்கப்பட்டு உள்ளேவைக்கப்பட்டிருந்த ரூ. 10,000 கைப்பற்றப்பட்டது. காரை மேலும் நுணுக்கமாக போலீசார் ஆராய்ந்தபோது பின் சீட்டுக்குக் கீழ்ஒரு ரகசிய அறை இருப்பது தெரிந்தது. அதை உடைத்துப் பார்த்தபோது 500 ரூபாய், 100 ரூபாஸ் கட்டுக்கள் குவிந்து கிடந்தன.

ரூ.75 லட்சம் அதில் பதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தக் காரில் இருந்த அப்பாஸ், வினோத் குமார், மனோஜ் ஆகியமூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹவாலா மோசடி கும்பல் என்பது விசாரணையில் உறுதியானது.

இவர்கள் மீது அன்னிய செலாவணிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும் சேலம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+