கிரிமினல் வழக்கு: அதிமுக வேட்பாளரின் வேடபு மனு நிராகரிக்கப்படுமா?
தூத்துக்குடி:
சாத்தான்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலுவையில்உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல அதிமுக மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நீலமேகவர்ணத்தின் மகன் மீதும் ஒரு கொலைவழக்கு உள்ளதாகத் தெரிகிறதுய
சாத்தான்குளம் அதிமுக வேட்பாளராக நீலமேகவர்ணம் கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று அவர் சாத்தான்குளம் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல்செய்தார்.
இந்நிலையில் நீலமேகவர்ணம் மீது கிரிமினல் வழக்கு ஒன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுதெரியவந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்காக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர்ஆஜராகவுள்ளார்.
இந்தியத் தேர்தல் சட்டப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதையடுத்து சாத்தான்குளத்தில் போட்டியிடும் நீலமேகவர்ணத்தின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் ஆபத்துஏற்பட்டுள்ளது.
அதே போல இவரது மகன் கதிரவ ஆதித்தன் மீதும் கொலை வழக்கு உள்ளது. கோவில் திருவிழா ஒன்றில் ஏற்பட்டகோஷ்டி மோதலில் நடந்த கொலையில் கதிரவ ஆதித்தனுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது. இவர் தான்அதிமுகவின் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் அவருடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்படலாம் என்றுதெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications