சன் டி.வி. நிருபர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் முறையான அனுமதியின்றி படம் பிடித்ததைக் கண்டித்தவக்கீல்கள் சங்கத் தலைவரைத் தாக்கியதாக சன் டி.வி. நிருபர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் காந்தப் படுக்கை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சுரேஷ்குமார் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் நீதிமன்ற வளாகத்தில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சில வக்கீல்களுடன் சைதாப்பேட்டை நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ராமசாமி அங்கு வந்தார்.அனுமதியில்லாமல் இவ்வாறு படம் பிடிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து படம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கும், ராமசாமிக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மாஜிஸ்திரேட் ஜெயபாலனை அணுகிய வக்கீல்கள் சங்கத் தலைவர் ராமசாமி, சன் டி.வி. நிருபர்சுரேஷ்குமார் தன்னைத் தாக்கியதாகப் புகார் கொடுத்தார்.

அவரது புகாரை ஏற்ற நீதிபதி ஜெயபாலன், சுரேஷ்குமாரைக் கைது செய்யுமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குஉத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் முன்புஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சுரேஷ்குமார் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சன் டி.வி. கண்டனம்:

இந்நிலையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டதற்கு சன் டி.வி. நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு மிரட்டலே இது என்று சன் டி.வி. கூறியுள்ளது. இதுதொடர்பாக சன் டி.வி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

உண்மையில் ராமசாமியும் சில வக்கீல்களும் சேர்ந்து சுரேஷ்குமாரைத் தாக்கியுள்ளனர். அவரது கையில் இருந்தகேமராவைப் பறித்து அதிலிருந்த கேசட்டையும் அவர்கள் எடுக்க முயன்றுள்ளனர்.

இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் கொடுக்கச் சென்றபோது புகாரை வாங்கபோலீஸார் மறுத்து விட்டனர். ஆனால் ராமசாமி புகார் கொடுத்ததும் உடனடியாக போலீசார் நடவடிக்கையில்இறங்கினர்.

முறையான விசாரணை நடத்தாமல், சுரேஷ்குமாரைக் கைது செய்ததோடு, அவரது காரையும் பறிமுதல்செய்துள்ளனர். சன் டி.வி. நிறுவனத்தின் காரும் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களாலேயே அடித்துநொறுக்கப்பட்டுள்ளது என சன் டி.வி. நிர்வாகம் கூறியுள்ளது.

சன் டி.வி. நிருபர் ஒருவர் கைது செய்யப்படுவது சமீப காலங்களில் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவேஒருமுறை விழுப்புரம் சன் டி.வி. நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டு பெரும் பிரச்சினையானது குறிப்பிடத்தக்கது.

நிருபர்கள் ஆலோசனை:

இந் நிலையில் சன் டிவி நிருபர் சுரேஷ்குமார் கைது விவகாரம் தொடர்பாக அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை பத்திரிக்கையாளர்கள்சங்கங்கள் விவாதித்து வருகின்றன.

சென்னை நிருபர்கள்சங்கம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் இந்த ஆலோசனைகளில்ஈடுபட்டுள்ளனர். கைதை எதிர்த்து நிருபர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+