For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை பீச் to

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பீச் (கடற்கரை) முதல் தாம்பரம் வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து,சோதனை ஓட்டமும் நடந்து முடிந்ததையடுத்து இன்று மாலை முதல் இந்தப் பாதையில் மின்சார ரயில்கள்இயக்கப்பட்டன.

மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையரான குப்தா சென் தலைமையிலான குழுவினர் நேற்று இந்த அகல ரயில்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தினர்.

இதையடுத்து இன்று காலையிலிருந்தே அகலப் பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று பகலில்தான் குப்தா சென் தன்னுடைய ஒப்புதலை அளித்தார்.

இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு மேல் பீச்-தாம்பரம் அகல ரயில் பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கின.

புதிய அகலப் பாதையில் தினமும் 124 முறை ரயில்கள் இயக்கப்படும். இதற்கு முன்பு 110 சர்வீஸ்கள் மட்டுமேஇயக்கப்பட்டு வந்தன.

"பீக் ஹவர்" எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்றநேரங்களில் 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது இந்தப் பாதை மூலம் தினமும் சுமார் 4 லட்சம் பயணிகள் ரயிலில் சென்றுவந்தனர்.

தற்போது இது அகலப் பாதையாக மாறிவிட்ட நிலையில், தினமும் சுமார் 6 லட்சம் பேர் இப்பாதையில்பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்டர் கேஜ் பாதையில் தற்போது 146 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை இனி 156ஆகஅதிகரிக்கப்படும்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X