இலங்கை: நாளை ஜெர்மனியில் 5வது சுற்று அமைதி பேச்சு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 5வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரில் தொடங்குகின்றன.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது, புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள், சிறுமிகள்சேர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்பான பிரச்சனை மற்றும் சில மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளும்விவாதிகக்கப்படவுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப. தமிழ்ச்செல்வனும், ராணுவப் பிரிவுத் தலைவர் கருணாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே பெர்லின் சென்று விட்டனர்.
இந்நிலையில் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஜி.எல். பெய்ரிஸ் நேற்று பெர்லின்கிளம்பிச் சென்றார்.
புலிகளின் அரசியல் ஆலோசகரும் புலிகள் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஆன்டன் பாலசிங்கமும்அவருடைய மனைவி அடேல் பாலசிங்கமும் இன்று லண்டனிலிருந்து நேரடியாக பெர்லின் சென்று விடுவார்கள்.
பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பேச்சுவார்த்தை தாய்லாந்திலிருந்து ஜெர்மனிக்குமாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெர்லினில் நான்கு நாட்கள் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைஇதே காரணத்துக்காக இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜப்பானில் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்குகின்றன என்பதும்நினைவு கூறத்தக்கது.
புலிகளின் ராணுவப் பிரிவில் சிறார்களைச் சேர்ப்பது தொடர்பாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த "யூனிசெப்"பின் தலைவர்களும் ஜெர்மனிக்கு விரைகின்றனர்.
சிறார்களை இனி எங்கள் இயக்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று எழுத்து பூர்வமான உறுதிமொழியை "யூனிசெப்"அமைப்புக்கு புலிகள் வழங்குவார்கள் அப்போது வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர்களையும் சிறுமிகளையும் மீட்டு, அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைஅமைப்பது தொடர்பான நடவடிக்கைகளிலும் "யூனிசெப்" ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications