இலங்கை: நாளை ஜெர்மனியில் 5வது சுற்று அமைதி பேச்சு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 5வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரில் தொடங்குகின்றன.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது, புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள், சிறுமிகள்சேர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்பான பிரச்சனை மற்றும் சில மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளும்விவாதிகக்கப்படவுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப. தமிழ்ச்செல்வனும், ராணுவப் பிரிவுத் தலைவர் கருணாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே பெர்லின் சென்று விட்டனர்.
இந்நிலையில் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஜி.எல். பெய்ரிஸ் நேற்று பெர்லின்கிளம்பிச் சென்றார்.
புலிகளின் அரசியல் ஆலோசகரும் புலிகள் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஆன்டன் பாலசிங்கமும்அவருடைய மனைவி அடேல் பாலசிங்கமும் இன்று லண்டனிலிருந்து நேரடியாக பெர்லின் சென்று விடுவார்கள்.
பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பேச்சுவார்த்தை தாய்லாந்திலிருந்து ஜெர்மனிக்குமாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெர்லினில் நான்கு நாட்கள் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைஇதே காரணத்துக்காக இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜப்பானில் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்குகின்றன என்பதும்நினைவு கூறத்தக்கது.
புலிகளின் ராணுவப் பிரிவில் சிறார்களைச் சேர்ப்பது தொடர்பாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த "யூனிசெப்"பின் தலைவர்களும் ஜெர்மனிக்கு விரைகின்றனர்.
சிறார்களை இனி எங்கள் இயக்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று எழுத்து பூர்வமான உறுதிமொழியை "யூனிசெப்"அமைப்புக்கு புலிகள் வழங்குவார்கள் அப்போது வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர்களையும் சிறுமிகளையும் மீட்டு, அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைஅமைப்பது தொடர்பான நடவடிக்கைகளிலும் "யூனிசெப்" ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.