சாத்தான்குளம்: நல்ல நேரம் பார்த்து நாளை மனு தாக்கல் செய்கிறார் மகேந்திரன்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான வழக்கறிஞர் மகேந்திரன்நாளைதான் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். முன்னதாக அவர் இன்று மனு தாக்கல் செய்வார்என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை காங்கிரஸ் பிரமுகர்கள் புடைசூழ மகேந்திரன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்.
பின்னர் அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரம் பார்க்கப்பட்டுள்ளது.
நாளை பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குள்தான் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்திற்குள்மகேந்திரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
முன்னதாக இன்றே அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்வியாழக்கிழமையை (இன்று) விட நாளை நல்ல நாள் என்பதால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள்மாற்றப்பட்டுள்ளது.
மனு செய்ய நாளை கடைசி நாள்:
இந்நிலையில் சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளைதான் கடைசிநாளாகும்.
இதுவரை அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம், அக்கட்சியின் மாற்று வேட்பாளரும் அவருடைய மகனுமானகதிரவ ஆதித்தன் ஆகியோர் மட்டுமே கட்சி சார்பாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களைத் தவிர மொத்தம் 11 சுயேச்சைகள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஆக இதுவரைமொத்தம் 13 பேர் சாத்தான்குளத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில்தான் கடைசி நாளான நாளை மகேந்திரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார். நாளைமறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வரும் 10ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளகடைசி நாளாகும்.
-->












Click it and Unblock the Notifications