புலிகளின் படகில் விமான எதிர்ப்பு துப்பாக்கி பிடிபட்டது
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று ஜெர்மனியில்துவங்கவுள்ள நிலையில், இலங்கையின் நெடுந்தீவு கடல் பகுதியில் புலிகளுக்குச் சொந்தமான ஒரு படகில் விமானஎதிர்ப்பு துப்பாக்கி ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் இந்தியப் பதிவு எண்ணைக் கொண்ட ஒரு புலிகளின் படகை இலங்கை கடற்படையினர்கைப்பற்றினர்.
ஆனால் தங்கள் படகில் கடற்படையினர் ஏறினால் சயனைடு அருந்தித் தற்கொலை செய்து கொள்வோம் என்றுபடகில் இருந்த மூன்று புலிகளும் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு உடனடியாகத் தகவல்தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து சோதனையிட்டபோது புலிகளின் படகில் இருந்த 23 மி.மீ. நீளமுள்ள மெஷின் கன்கைப்பற்றப்பட்டது. இந்தத் துப்பாக்கியைக் கொண்டு வானில் பறக்கும் விமானத்தைத் தரையிலிருந்தே தாக்கிஅழிக்க முடியும்.
இந்தச் சம்பவம் குறித்து கண்காணிப்புக் குழுவினர் தெரிவிக்கையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள்மீறியுள்ளனர். ஆனாலும் இது தொடர்பான மேல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இலங்கை அரசுதான் முடிவுசெய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இத்தகவல் உடனடியாக பெர்லின் நகருக்கும் பறந்தது. அங்குள்ள புலிகள் மற்றும் இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தைக் குழுவினரிடையேயும் இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கல் ஏற்படாத வகையில் அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் ஐந்தாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்தொடங்கவுள்ளன.
புலிகளின் படகில் விமான எதிர்ப்பு துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில்முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும் சிறார் புலிகளின் எதிர்காலம் மற்றும் மனித உரிமை தொடர்பான விஷயங்களும் இந்தப்பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படவுள்ளன.
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தில் உடல் நிலையைக் கருத்தில் கொண்டுதாய்லாந்திலிருந்து ஜெர்மனிக்கு மாற்றப்பட்டுள்ள இந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நாளையுடன்முடிவடைகின்றன.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications