For Daily Alerts
Just In
ஜெ. முன்னிலையில் 2,500 பேர் அதிமுகவில் இணைந்தனர்
சென்னை:
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாமுன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு நேற்று ஜெயலலிதா சென்றார். அங்குஅவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
அங்கு அதிமுகவைச் சேர்ந்த இரண்டு ஜோடிகளுக்கு ஜெயலலிதா திருமணம் நடத்தி வைத்த ஜெயலலிதா பின்னர்17 குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.
இதையடுத்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500பேர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்இணைந்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-->
Comments
Story first published: Saturday, February 8, 2003, 5:30 [IST]