காந்தப் படுக்கை நிறுவன அதிபரின் முன் ஜாமீன் ரத்து
சென்னை:
காந்தப் படுக்கை மோசடி வழக்கில் அதை விற்று வந்த நிறுவனத்தின் அதிபரான ராதாகிருஷ்ணனுக்கு முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.
சென்னையில் சில நாட்களுக்கு முன் காந்தப் படுக்கை மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. பல கோடி ரூபாய்அளவுக்கு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த பெரிய கும்பலே பிடிபட்டது.
சாதாரண படுக்கையை மருத்துவ குணம் கொண்ட காந்தப் படுக்கை என்று கூறி மோசடி செய்தது அம்பலமாகியது.இது தொடர்பாக 84 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் டாக்டர்கள் மற்றும்என்ஜினியர்கள்.
இந்நிலையில் காந்தப் படுக்கை நிறுவன அதிபர் ராதாகிருஷ்ணன் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏற்கனவேமுன் ஜாமீன் பெற்று விட்டார். இதனால் அவரைப் போலீஸார் கைது செய்ய முடியாமல் இருந்தனர்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பிரிவுபோலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகப்பன், ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications