சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ் உடைந்தது
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏரோ பிரிட்ஜ் (விமான பாலம்) திடீரென உடைந்து சரிந்தது. இதில் 2விமான நிலைய ஊழியர்கள் காயமடைந்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட பகுதி இன்னும் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படவில்லை. இங்குதான் இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய உள் பகுதியில் இருந்து விமானத்துக்குள் செல்ல இந்த பாலத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான் இந்த பாலத்தை நிறுவியது. இன்று இந்த பாலத்தின் முக்கிய அச்சு (ச்துடூஞு)திடீரென முறிந்தது. இதையடுத்து அந்த பாலமே சரிந்தது. இதனால் அப் பகுதியில் பெரும் சத்தம் உண்டானது.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இச் சம்பவத்தை உறுதி செய்த விமான நிலையஇயக்குனர் திரசூர்வாலா, தாய்லாந்து நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களகு குழு சென்னை வர உள்ளது. பாலம்உடைந்ததற்கான காரணத்தை அக் குழு கண்டறியும். இச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றார்.
ஆனால், இந்த பிரிட்ஜ் அருகே நின்றிருந்த இரு விமான நிலைய ஊழியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையவட்டாரங்கள் தெரிவித்தன.
இன்னும் பயணிகளால் பயன்படுத்தப்படாத, புத்தம் புதிய பாலம் உடைந்திருப்பது அதன் தரம் குறித்து பெரும் சந்தேகத்தைஏற்படுத்தியுள்ளது.
-->