For Daily Alerts
Just In
சங்கரன்கோவில்: மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது குண்டு வீச்சு
சங்கரன்கோவில்:
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது நாட்டு வெடிகுண்டுவீசப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கடந்த 2000ல் சங்கரன்கோவில் பஞ்சாயத்து யூனியன் தலைவர் குருசாமி படுகொலை செய்யப்பட்டார். அதில்முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டவர் வீரப்புத்திரன்.
இருமாங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அவர், தன் உதவியாளர் பழனியப்பன் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஐந்து பேர் பேர் கொண்ட கும்பல் அவர்ளை வழி மறித்தது. பின்னர் வீரபுத்திரன், பழனியப்பன் மீதுநாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் சராமாரியாக வீசினர்.
இதில் வீரபுத்திரன் படுகாயமடைந்தார். அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
Comments
Story first published: Friday, February 14, 2003, 5:30 [IST]