393 காவலர்களுக்கு வீரப் பதக்கம்: ஜெ. இன்று வழங்குகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் 393 காவலர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வீரப் பதக்கம்வழங்குகிறார்.
கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையில் பணியாற்றும் 66 காவலர்கள், தீயணைப்புப் படையில்பணியாற்றும் 46 காவலர்கள், சிறைத் துறையைச் சேர்ந்த 38 பேர் மற்றும் ஊர்க் காவல்படையைச் சேர்ந்த 23பேருக்கு இந்த வீரப் பதக்கம் வழங்கப்படுகிறது.
அவர்களது வீர தீர செயல்களுக்காகவும், சிறப்பான கடமைக்காகவும் வழங்கப்படும் இந்தப் பதக்கம் அளிக்கும்நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி. ராஜகோபாலன், சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் விஜயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
-->












Click it and Unblock the Notifications