பொடா வழக்கு: குற்றப் பத்திரிக்கையை பெற்றார் நெடுமாறன்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ. நெடுமாறன் உள்படஅக்கட்சியைச் சேர்ந்த 4 பிரமுகர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் விடுதலைப்புலிகளைஆதரித்துப் பேசியதாக ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியன், பாவாணன் மற்றும்டாக்டர் தாயப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நான்கு பேர் மீதும் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுமாறன் உள்பட நான்கு பேரும் இன்றுசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது குற்றப்பத்திரிக்கையின் நகல்களை அவர்களிடம் நீதிபதி எல். ராஜேந்திரன் வழங்கினார். சுமார் 1,135பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில் 66 ஆவணங்களும், 112 சாட்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிக்கையை வழங்கிய பின்னர் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 5ம் தேதிக்குநீதிபதி ராஜேந்திரன் ஒத்திவைத்தார். இதையடுத்து நெடுமாறன் உள்ளிட்ட நான்கு பேரும் கடலூர் சிறைக்குக்கொண்டுசெல்லப்பட்டனர்.
இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஷாகுல் ஹமீதுஎன்பவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கக் கோரி, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் "க்யூ" பிரிவு போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
-->