சாத்தான்குளம் தேர்தலை நிறுத்த கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளம் தேர்தலில் போட்டியிட இந்தியக் குடியரசுக் கட்சி (அம்பேத்கர்) சார்பில் ராஜ்குமார்என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவுடன் நோட்டரி பப்ளிக் வழங்கும்சான்றிதழ் இணைக்கப்படவில்லை.
இதையடுத்து 8ம் தேதிக்குள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரி கால அவகாசம்வழங்கியிருந்தார். ஆனால் அப்படியும் ராஜ்குமார் நோட்டரி பப்ளிக் சான்றிதழை சமர்ப்பிக்காததால்அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ராஜ்குமார் முறையிட்டபோது அதில் தலையிடதனக்கு அதிகாரம் இல்லை என்று தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ராஜ்குமார். அதில், தனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரைதேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம், தேர்தல் பணிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அதில்தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications