எஞ்சிய சம்பா பயிர்களைக் காக்க கடைசி முயற்சி: மேட்டூர் அணை மீண்டும் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

மிகக் குறைவான நீரே உள்ளபோதிலும், காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணைமீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் சுத்தமாக தண்ணீர் வற்றிப் போனதால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அணைமூடப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையம் ஆகியவற்றின் தொடர்உத்தரவுகளுக்குப் பிறகு கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது.

இதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர் வரத் தொடங்கியது. இதையடுத்து தற்போதுமேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இருப்பினும் அணையில் குறைந்தஅளவே தண்ணீர் இருப்பதால் மூன்று நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என்றும்,வரும் 19ம் தேதி அணை மூடப்படும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே முக்கால்வாசிக்கும் மேலான சம்பா பயிர்கள் கருகிப்போய்விட்டன. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நீரும் அப்பகுதிகளுக்குச் சென்று சேர குறைந்ததுஒரு வாரமாகும். அதுவரை எஞ்சியுள்ள சம்பா பயிர்களாவது தாக்குப் பிடிக்குமா என்றுதெரியவில்லை.

அணையில் மிகக் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ள நிலையில் அணை திறக்கப்பட்டிருப்பதுஇதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அணையின் நீர் மட்டம் தற்போது 32.22 அடியாக (8.42டி.எம்.சி.) உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,058 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+