திருச்செந்தூரில் கொட்டும் மழையில் தேரோட்டம்: பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தேரோட்டம் நடந்தபோது மழை கொட்டத்தொடங்கியது. இருந்தாலும் பக்தர்கள் அதிக உற்சாகத்துடன் கொட்டும் மழையில் தேரை இழுத்துச்சென்றனர்.
திருச்செந்தூர் கோவிலில் ஒவ்வொரு மாசி மாதமும் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதுவழக்கம். இந்த ஆண்டும் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் இந்தத் திருவிழா தொடங்கியது.
இந்த மாசிமகத் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா நேற்று நடைபெற்றது.காலை 5.30 மணிக்கு விநாயகர் தேர் நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து, 6.35 மணிக்கு நிலையைஅடைந்தது.
அதன் பின்னர் சுப்பிரமணியசுவாமியான முருகப் பெருமான அமர்ந்திருந்த தேர் காலை 6.55மணிக்கு புறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷங்களுடன் வடம் பிடித்துதேரை இழுத்துச் சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில் திருச்செந்தூர் வானம் முழுவதும் மேகங்கள் திரண்டு வந்தன. குளிர்காற்றும் வீசத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகத்துடன்தேரை இழுத்துக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் காலை 7.45 மணிக்கு மேற்கு-வடக்கு ரத வீதி சந்திப்பில் தேர் வந்துகொண்டிருந்தபோது, மழை கொட்டத் தொடங்கியது. திருச்செந்தூர் முழுவதும் பலத்த மழைபெய்ததால், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இருந்தாலும் பக்தர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் "கந்தனுக்கு அரோகரா, முருகனுக்குஅரோகரா" என்ற கோஷத்துடனும், மனம் நிறைய உற்சாகத்துடனும் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். வீதிகளில் திரண்டிருந்த மக்களும் சுவாமியை தரிசித்து மகிழ்ந்தனர்.
சுமார் அரை மணி நேரம் கழித்து மழை நின்றது. அதன் பிறகும் தேர் அனைத்து ரத வீதிகளையும் சுற்றிவிட்டு பின்னர் காலை 9.10 மணிக்கு நிலையை வந்து அடைந்தது.
தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பலஇடங்களிலும் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன.
மேலும் திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
-->