மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைகிறது
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
கர்நாடகம் தனது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திவிட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து விட்டது.இப்போது அணைக்கு வினாடிக்கு1,320 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
அணையின் நீர்மட்டம், புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி 28.06 அடியாகவே உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டாவில் உள்ளசம்பா பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருவதால் சம்பா பயிர்களைக் காக்க திறந்துவிடப்படும் நீரும் படிப்படியாககுறைக்கப்பட்டுவிடும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மழை பெய்தாலோ அல்லது கர்நாடகம் மீண்டும் தண்ணீர் திறந்துவிட்டாலோ தான் அடுத்த பயிரிடும் பணியைத் தொடங்கவே முடியும்என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications