For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை பஸ் நிலைய பிரச்சினை: கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் பழங்காநத்தம் பஸ் நிலையம் மீண்டும் செயல்படும் என்று அம்மாவட்ட கலெக்டர்பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் வெளியூர் பேருந்துகள் வந்துசெல்வதற்காக ஊருக்கு வெளியே மாட்டுத்தாவணி என்ற இடத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து வட, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் நின்று வந்த அண்ணா மற்றும்பழங்காநத்தம் பஸ் நிலையங்கள் முழுவதுமாகச் செயலிழந்து போயின.

இந்நிலையில் இம்மாதம் 20ம் தேதி (நேற்று) முதல் பழங்காநத்தம் பஸ் நிலையம் மீண்டும்செயல்படத் தொடங்கும் என்று சமீபத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்தார். அதன்படி தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் இனி பழங்காநத்தம் பஸ் நிலையத்திலிருந்தே செயல்படும்என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கடும்அதிருப்தி அடைந்தனர்.

தென் மாவட்ட பஸ்கள் அனைத்தும் மீண்டும் பழங்காநத்தம் பஸ் நிலையத்திற்கே மாற்றப்பட்டால்தங்களுடைய வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான மனுவை இன்று நீதிபதி மிஸ்ரா விசாரித்தார். மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் பழங்காநத்தம் பஸ் நிலையத்தில்தான் செயல்படும் என்றுகலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

மேலும் இந்த மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் மார்ச் 4ம் தேதி நடைபெறும் என்றும்நீதிபதி மிஸ்ரா கூறினார்.

மதுரை மாநகராட்சியின் முடிவை எதிர்த்து ஏற்கனவே மாட்டுத்தாவணி பஸ் நிலைய வியாபாரிகள்நேற்று முன் தினம் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X