இலங்கை அமைதிப் பேச்சு தொடங்கி ஓராண்டு நிறைவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி வரும்ஞாயிற்றுக்கிழமையுடன் ஓராண்டு நிறைவேறுகிறது.
2001ம் ஆண்டு டிசம்பரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி தான்நார்வே உதவியுடன் இரு தரப்பினரும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுவரை 5 சுற்றுப் பேச்சுக்கள் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்ட நிலையில் தமிழர்களிடையே பெரும்நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
வட கிழக்குப் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த உணவு தானியங்கள் தடையின்றி செல்லஆரம்பித்துவிட்டன.
சமீபத்தில் 4 புலிகளை கடற்படை சுற்றி வளைத்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு ராணுவவீரரை யாழ்பாணத்தில் வைத்து புலிகள் சுட்டுக் கொன்றனர். இச் சம்பவங்கள் தவிர பெரிய அளவில் இருதரப்பிலும் கடந்த ஓராண்டில் மோதல் ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட்டதாக இரு தரப்பினரிடம் இருந்தும் கிட்டத்தட்ட 3,000புகார்கள் நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவினரிடம் குவிந்துள்ளன.
இது குறித்து நார்வே அதிகாரி டிரோண்ட் புருஹோவ்டே கூறுகையில்,
ராணுவத் தரப்பிலும் புலிகள் தரப்பிலும் அமைதியை விரும்புபவர்கள் தான் பெரும்பான்மையினராக உள்ளனர்.ஆனால், இரு தரப்பிலும் உள்ள தீவிரவாத எண்ணம் கொண்டவர்களால் தான் பிரச்சனையே வருகிறது.
1972ம் ஆண்டு முதல் சுமார் 60,000 உயிர்ப் பலிகள் நடந்துவிட்டன. ஆனால், இனியும் உயிர்ப் பலிகளை இருதரப்பினரும் விரும்பவில்லை. ராணுவ அமைப்பு என்பதில் இருந்து ஜனநாயக அமைப்பாக மாற வேண்டியஅவசியம் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இங்கு நடக்கும் சம்பவங்களால் எனக்கே நம்பிக்கைஇழப்பு ஏற்பட்டுவிடுகிறது.
ஆனால், இரு தரப்பினரும் அமைதியின் தேவையை உணர்ந்துவிட்டது தான் மிகப் பெரிய மகிழ்ச்சி தருகிறது.
2001ம் ஆண்டில் கூட போரினால் 2,000 பேர் பலியானார்கள். கடந்த ஆண்டு சாவுகள் மிக மிகக் குறைவு. இதுதான் இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பிவிடும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்துள்ளது என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஓராண்டு முடிவதைக் கொண்டாடும் வகையில் கொழும்பில் உள்ள சுந்திரமையத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்த பிரதமர் ரணில் முடிவு செய்துள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications